Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடைக்கு முன் குப்பை குவிந்தால் ரூ.500 நிர்­வாக கட்­டணம் வசூ­லிக்கும் பணி மும்­முரம்

Print PDF

தினமலர்                12.08.2013

கடைக்கு முன் குப்பை குவிந்தால் ரூ.500 நிர்­வாக கட்­டணம் வசூ­லிக்கும் பணி மும்­முரம்


சென்னை:கடைக்­கா­ரர்கள், சாலையில் குப்பை வீசு­வதை தவிர்க்க, அனைத்து கடை­க­ளிலும் குப்பை தொட்­டிகள் கட்­டாயம் என, மாந­க­ராட்சி அறி­வு­றுத்­தி­யு உள்­ளது. இதை மீறி குப்பை வீசு­ப­வர்­க­ளுக்கு, 500 ரூபாய், நிர்­வாக கட்­டணம் வசூ­லிக்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கி­றது.

உத்தரவு

சென்­னையில், கடைகள் அமைந்­துள்ள சாலை­களில், குப்­பையை அப்­பு­றப்­படுத்தும் பணி பெரும் சவா­லாக அமைந்துள்­ளது. இது­போன்ற சாலை­களில், காலை நேரத்தில் மாந­கராட்சி துப்­பு­ரவு பணி­யா­ளர்கள் குப்­பையை அப்­பு­றப்­ப­டுத்­து­கின்­றனர். ஆனால், ஒரு சில மணி நேரத்­தி­லேயே, கடை திறக்கும் உரி­மை­யா­ளர்கள், கடையில் உள்ள குப்­பையை மீண்டும் சாலையில் குவித்து வைக்­கின்­றனர்.

இந்த குப்பை காற்றில் தெரு முழு­வதும் பரவி, குப்பை மய­மாக காட்­சி­ய­ளிக்­கி­றது. இதை தடுக்க, அனைத்து கடை­களிலும் குப்பை தொட்­டிகள் கட்­டாயம் என்றும், கடைக்கு முன் சிறிய அளவில் குப்பை தேக்­க­ம­டைந்து இருந்தால் கூட, 500 ரூபாய் நிர்­வாக கட்டணம் வசூ­லிக்­கவும் மாநகராட்சி உத்­த­ர­விட்­டுள்­ளது.

ரூ.15 ஆயிரம்

இதுகுறித்து, அந்­தந்த துப்புரவு அலு­வலர், துப்­பு­ரவு ஆய்­வா­ளர்கள், சுகா­தார ஆய்­வா­ளர்­க­ளுக்கு ரசீது புத்­தகம் வழங்­கப்­பட்டு, கடந்த இரண்டு வாரங்­க­ளாக குப்­பையை தெருவில் வீசும் கடைக்­கா­ரர்­க­ளிடம் நிர்­வாக கட்­டணம் வசூலிக்­கப்­பட்டு வரு­கி­றது.

தேனாம்­பேட்டை மண்­ட­லத்தில், கடந்த வாரம், 15 ஆயிரம் ரூபாய் வரை குப்பை வீசி­ய­வர்­க­ளிடம் வசூ­லிக்­கப்­பட்­டது. அண்­ணா­நகர் மண்டலத்­திலும் இதே அளவு வசூல் நடந்­துள்­ளது.

எச்சரிக்கை

இது குறித்து மாந­க­ராட்சி சுகா­தார அதி­காரி ஒருவர் கூறியதா­வது:

குப்­பை­யில்லா சென்னை நக­ருக்கு வியா­பா­ரிகள் ஒத்துழைப்பு அவ­சியம் தேவை. கடை­களில் சேக­ர­மாகும் குப்பையை தொட்டியில் சேகரித்து, மாந­க­ராட்சி குப்பை தொட்­டியில் அதை கொட்ட வேண்டும். சாலையில் வீசு­வதை தவிர்க்­கவே இந்த நடவடிக்கை. ஓரிரு முறை எச்சரிக்­கைக்கு பிறகே கட்டணம் வசூ­லிக்­கப்­ப­டு­கி­றது.
இவ்­வாறு அவர் கூறினார்.

கடைக்­கா­ரர்கள் சிலர் கூறுகையில், ‘பல இடங்­களில் குப்பை தொட்­டிகள் நீண்ட துாரத்தில் உள்­ளன. மற்­ற­வர்கள் கடை முன் வீசும் குப்­பைக்கும், எங்­க­ளிடம் அப­ராதம் வசூ­லிப்­பது ஏற்க முடி­யாது' என்­றனர்.