Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துரைப்­பாக்கம் ஆனந்தா நகரில் மழைநீர் கால்வாய் ஆய்வு பணிகள் முடிந்­த­தாக மாந­க­ராட்சி விளக்கம்

Print PDF
தினமலர்            13.08.2013

துரைப்­பாக்கம் ஆனந்தா நகரில் மழைநீர் கால்வாய் ஆய்வு பணிகள் முடிந்­த­தாக மாந­க­ராட்சி விளக்கம்


சென்னை:மாந­க­ராட்­சியால் நிய­மிக்­கப்­பட்ட தனியார் நிறு­வனம் கள ஆய்வு முடித்து, கடந்த, 2ம் தேதி அறிக்கை சமர்ப்­பித்­தது. விரைவில் திட்ட மதிப்­பீடு தயார் செய்து, துரைப்­பாக்கம் ஆனந்தா நகர், விநா­யகா நகரில் மழைநீர் கால்வாய் அமைக்­கப்­படும்,’ என, மாந­க­ராட்சி விளக்கம் அளித்­துள்­ளது.

சென்னை மாந­க­ராட்­சி­யுடன் இணைக்­கப்­பட்டு இரண்டு ஆண்­டுகள் ஆகியும், துரைப்­பாக்கம் ஆனந்தா நகர், விநா­யகா நகரில் மழைநீர் கால்வாய், சாலை பணிகள் எதுவும் நடை­பெ­ற­வில்லை என, ‘தின­மலர்’ நாளி­தழில் நேற்று, விரி­வான செய்தி வெளி­யி­டப்­பட்டு இருந்­தது.

இதுகுறித்து, சென்னை மாந­க­ராட்சி அளித்­துள்ள விளக்கம்:

மழைநீர் கால்வாய் அமைக்க கோரி ஆனந்தா நகர், விநா­யகா நகர் நல­சங்­கங்கள் சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரல், செப்­டம்பர், இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்­களில் மேய­ரிடம் புகார் மனு கொடுக்­கப்­பட்­டது.

பரிந்துரை

இந்த புகார்கள் மீது நட­வ­டிக்கை கோரி, மழைநீர் வடி­கால்வாய் துறை மேற்­பார்வை பொறி­யா­ள­ருக்கு மேயர் பரிந்­துரை செய்­துள்ளார். குறிப்­பிட்ட நலச்­சங்­கங்கள் கொடுத்த மற்ற புகார்கள் மீதும் நட­வ­டிக்கை கோரி அந்­தந்த துறை­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், நட­வ­டிக்கை இல்­லாமல் இருந்தால், தெரி­விக்க கோரி மேயர் நேர­டி­யாக, அந்த நல­சங்­கங்­க­ளுக்கு கடிதம் எழு­தி­உள்ளார்.

கள ஆய்­வு


இந்த நகர்­களின் மழைநீர், பள்­ளிக்­க­ரணை சதுப்பு நில பகு­தி­க­ளுக்கு கொண்டு செல்ல வேண்டும். இது பெரிய பணி என்­பதால், விரி­வான கள ஆய்­வுக்கு தனியார் நிறு­வ­னத்தை மாந­க­ராட்சி நிய­மித்­தது.

டெட்ரா டெக் என்ற அந்த நிறு­வனம் ஆய்வு பணி­களை முடித்து, கடந்த, 2ம் தேதி அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளது. இதை அடிப்­ப­டை­யாக கொண்டு, இனி, திட்ட மதிப்­பீடு தயார் செய்து விரைவில் பணிகள் துவங்­கப்­படும்.

ஆனந்தா நகரில், ஒன்­பது குறுக்கு சாலை­களும், விநா­யகா நகரில், ஏழு குறுக்கு சாலை­களும் உள்­ளன. இங்கு, 50.90 லட்சம் ரூபாய் மதிப்பில், கப்பி தள சாலைகள் அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

மதிப்பீடு

இதன் மீது, தார் சாலைகள் அமைக்க, 48.65 லட்சம் ரூபாய்க்கு மதிப்­பீடு தயார் செய்­யப்­பட்டு, வார்டு குழு ஒப்­புதல் இன்று (நேற்று) பெறப்­பட்­டது. இந்த நிதி­யாண்டில் பணிகள் மேற்­கொள்­ளப்­படும்.

ஆனந்தா நகர் பிர­தான சாலையை, 1.14 கோடி ரூபாய் செலவில் அமைக்க மதிப்­பீடு தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ‘கிரீட் 3’ திட்­டத்தில் இது செய்­யப்­படும். இந்த நகர் அமைந்­துள்ள 193வது வார்டில் அடுத்த மாதம் கழி­வுநீர் மற்றும் குடிநீர் பணிகள் துவங்க இருப்­பதால், அந்த பணி முடிந்த பிறகே சாலை அமைக்கும் பணிகள் துவங்­கப்­படும். இவ்­வாறு மாந­க­ராட்சி விளக்கம் அளித்­துள்­ளது.