Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை'

Print PDF

தினமணி           14.08.2013

"மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை'

குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டாரை பொருத்தி குடிநீரை உறிஞ்சினால், இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று செந்தாரப்பட்டி பேரூராட்சித் தலைவர் ஆர்.மாலினி ரமேஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

செந்தாரப்பட்டியில் குடிநீர் இணைப்புகளில் சட்டத்துக்குப் புறம்பாக மின் மோட்டார்களை பொருத்தி பலர் குடிநீரை உறிஞ்சுவதாக தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவர்களது குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படும் என்றார் மாலினி ரமேஷ்.