Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விதிமீறியவர்களிடம் ரூ.43 ஆயிரம் அபராதம்

Print PDF

தினகரன்            21.08.2013

விதிமீறியவர்களிடம் ரூ.43 ஆயிரம் அபராதம்

மதுரை: மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 7, 27, 53 மற்றும் 78 ஆகிய வார்டு களில் தீவிர துப்புரவு பணி நேற்று நடந்தது. இதனை பார்வையிட்ட வந்த கமிஷனர் நந்தகோ பால் கூறுகையில், ஒவ் வொரு மண்டலத்திலும் ஒரு வார்டு வீதம் நான்கு வார்டுகளில் தீவிர துப்புரவு பணி நடந்தது. இதில் 22 டன் குப்பை அகற்றப்பட்டது. கொசு மருந்து தெளிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. குப்பைகளை தெருவில் கொட்டியதற்காக 6 கடைகளுக்கு ரூ.3700 அபராதம் விதிக்கப்பட்டது. சாலையோரம் திரிந்த 18 மாடுகள் பிடிக்கப்பட்டன. இதற்காக மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.43 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,’’என்றார்.