தினகரன் 05.09.2013
மாநகராட்சி சார்பில் நிலுவை வரி வசூலிக்க சிறப்பு முகாம் குடிநீர் இணைப்பு துண்டிப்பு தவிர்க்க வேண்டுகோள்
திருச்சி: திருச்சி மாநகராட்சி சார்பில் நிலு வை வரி செலுத்த வரும் 30ம் தேதி வரை தீவிர வரி வசூல் முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மாநகராட்சிக்கு செலு த்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை வசூல் செய்வதற்கு தீவிர வரிவசூல் முகாம் நடைபெறுகிறது. மாநகராட்சி சட்டம் 126 பிரிவின்படி ஒவ்வொரு அரையாண்டும் அந்த அரையாண்டுக்கான சொத்து வரியை அரை யாண்டு துவங்கி 15 நாட்களுக்குள் செலுத்த வேண் டும். தண்ணீர் கட்டணங் களை 3 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும்.
வரும் 30ம் தேதி வரை நடைபெறும் தீவிர வரி வசூல் முகாமில், மாநகராட்சிக்கு செலுத்த வேண் டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், புதை வடிகால் சேவை கட்டணம் மற்றும் தொழில்வரி போன்ற அனைத்து நிலுவையில் உள்ள முதல் மற்றும் 2ம் அரையாண்டு வரையி லான வரியை செலுத்த வேண்டும். பொன்மலை, கோ.அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் ஆகிய 4 கோட்ட அலுவலகங்களில் உள்ள சேவை மையங்களிலோ அல்லது அரியமங்கலம், சுப்ரமணியபுரம், மேலகல்கண்டார் கோட்டை, கே.கே.நகர், கள்ளத்தெரு, நந்திகோவில் தெரு, தேவர்ஹால், திருவெறும்பூர் வார்டு அலுவலகம் ஆகிய இடங்களி லோ வரியை செலுத்தலாம்.
மேலும் தில்லைநகர், ஸ்ரீரங்கத்தில் உள்ள சிட்டி யூனியன், திருவெறும்பூரில் உள்ள எச்டிஎப்சி வங்கிக ளில் உள்ள வசூல் மையங்களில் செலுத்தலாம்.
இந்த வசூல் மற்றும் சேவை மையங்கள் பொதுமக்களின் வசதிக்காக அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதி யம் 2 மணி வரை செயல் படும்.
பொது மக்கள் வரியை உரிய காலத்தில் செலுத்தி ஜப்தி மற்றும் குடிநீர் குழாய், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் தவிர்க்குமாறு மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.