தினகரன் 26.09.2013
மாநகரில் கட்டுமான கழிவுகளை கொட்ட 17 இடம் ஒதுக்கீடு
கோவை: கோவை மாநகரில் கட்டுமான கழிவுகளை கொட்ட 17 இடங்களை ஒதுக்கீடு செய்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாநகராட்சி எல்லைக்குள் தனி நபர்கள், கட்டுமான உரிமையாளர்கள், அரசுத்துறையை சேர்ந்தவர்கள் பழைய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தும்போது, அதை முறையாக அகற்றாமல், சாலையோரம் ஆங்காங்கே கொட்டிவிடுகின்றனர்.
இது, வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. அத்துடன், கால்வாய்களில் அடைப்பு ஏற்படுத்துகிறது. இதை தவிர்ப்பதற்காக மாநகர எல்லைக்குள் மத்திய மண்டலம் தவிர இதர நான்கு மண்டல எல்லைக்குள் கட்டுமான கழிவுகளை கொட்ட 17 இடங்களை ஒதுக்கீடு செய்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம்:
‘‘மேற்கண்ட இடங்களை தவிர வேறு எந்த இடங்களிலும் சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்கள் கட்டட இடிபாடுகளை கொட்டக்கூடாது.
மீறி கொட்டும் பட்சத்தில் கட்டட உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும், அபராதம் விதிக்கப்படும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், அவர்களது சொந்த செலவில் கட்டட இடிபாடுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‘‘ என கோவை மாநகராட்சி கமிஷனர் லதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.