Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விதிமுறை மீறி கட்டப்பட்ட 190 கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

Print PDF

தினகரன்             01.10.2013

விதிமுறை மீறி கட்டப்பட்ட 190 கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

சேலம்: சேலத்தில் விதிமுறை மீறி கட்டியுள்ள 190 கட்டட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சாலைபாதுகாப்பு குறித்த ஆலோ சனைக் கூட்டம் கலெக்டர் மகரபூஷணம் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், கோட்டாட்சியர் சதீஷ், எஸ்பி சக்திவேல், போலீஸ் துணை கமிஷனர் பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சேலம் 4 ரோட்டில் இருந்து தம்மண்ணசெட்டிரோடு செல்லும் பாதையில் பஸ்கள் செல்ல தடைவிதிக்கப்படுமா? என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அதிகாரிகள், அவ்வாறு தடை விதிக்க முடியாது. ஆனால் சாலையோரம் உள்ள மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம் என்று பதில் அளித்தனர்.

சேலம் மாநகரில் ஒரு மாடிக்கு மட்டும் அனுமதி வாங்கிக்கொண்டு பல மாடிகள் கொண்ட வீடு கட்டுகின்றனர். ஆனால் பார்க்கிங் வசதி இல்லை. குடியிருப்பு பகுதிகளில் வணிக கட்டடங்கள் கட்ட தடை விதிக்கப்படுமா? கோவையை போல சீல் வைக்கப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், Ôசேலம் மாநகரில் 190 கட்டடங்கள் அனுமதியை மீறி கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்டிட உரிமையாளர்களுக்கு 30 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதுÕ என்றனர்.

துணை கமிஷனர் பாபு கூறுகையில், ‘மாநகரில் விபத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகரை விட மாவட்டத்தின் பிற பகுதிகளில் தான் விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது. அப்பகுதி குறைகளையும் உறுப்பினர்கள் தெரிவிக்க வேண்டும்Õ என்றார்.மாவட்ட எஸ்பி சக்தி வேல் பேசுகையில், Ôஓமலூர், ஆத்தூர், சங்ககிரி பைபாஸ் சாலைகளில் விபத்து அதிகமாக நடக்கிறது. டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கி விபத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுÕ என்றார். சேலம் மாநகரில் ஹெல் மெட் அணியாமல் டூவீலர் ஓட்டிச்சென்றதாக 29,978 வழக்குகளும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிச்சென்றதாக 649 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.