Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சிக்கு வரி செலுத்தாவிட்டால் "ஜப்தி'

Print PDF

தினமணி           04.10.2013

மாநகராட்சிக்கு வரி செலுத்தாவிட்டால் "ஜப்தி'

திருநெல்வேலி மண்டலத்துக்கு உள்பட்ட மாநகராட்சிக்கு வரி செலுத்தும் நபர்கள் 2013-14 ஆம் ஆண்டுக்கான வரியை செலுத்தாவிட்டால் மாநகராட்சி ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடும் என உதவி ஆணையர் (பொறுப்பு) து. கருப்பசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக, அவர் கூறியது:மாநகராட்சியின் திருநெல்வேலி மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வசிப்போர் தங்களது சொத்து வரி, காலிமனை வரி, குடிநீர்க் கட்டணம், தொழில் வரி, புதைசாக்கடை சேவைக் கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட அனைத்து வரியினங்களையும் அக்.15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

பலரும் தங்களது சொத்துகளுக்குரிய வரியினங்களை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். அவர்கள் உடனடியாக அந்தந்தப் பகுதியில் உள்ள மாநகராட்சி சேவை மையங்களை அணுகி வரிகளை செலுத்த வேண்டும். வரி நிலுவை வைத்திருப்போரது குடிநீர் இணப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக ஜப்தி நடவடிக்கையிலும் மாநகராட்சி ஈடுபடவுள்ளது. எனவே, நிலுவையில் உள்ள வரி இனங்களை உடன் செலுத்த வேண்டும். இல்லையெனில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி, சொத்துகளுக்கு சீல் வைத்தல் மூலம் வரி வசூலிக்க நேரிடும். எனவே, திருநெல்வேலி மண்டலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சியின் ஜப்தி நடவடிக்கைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார் உதவி ஆணையர் து. கருப்பசாமி.