Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இறுதி கட்­டத்தில் பாரம்­ப­ரிய கட்­ட­டங்­களின் முத­லா­வது பட்­டியல்

Print PDF

தினமலர்          15.10.2013

இறுதி கட்­டத்தில் பாரம்­ப­ரிய கட்­ட­டங்­களின் முத­லா­வது பட்­டியல்

ராய­புரம் ரயில் நிலையம் உள்­ளிட்ட, 66 பாரம்­ப­ரிய கட்­ட­டங்­களின் முத­லா­வது பட்­டி­யலை அர­சுக்கு அனுப்­பு­வ­தற்­கான பணிகள், இறுதி கட்­டத்தை அடைந்­துள்­ளன. இதுகுறித்து, வரும், 15ம் தேதி நடக்கும் குழும கூட்­டத்தில் முக்­கிய முடி­வுகள் எடுக்­கப்­பட உள்­ள­தாக தெரியவந்­துள்­ளது. சென்னை பெரு­நகர் வளர்ச்சி குழு­மத்தில் (சி.எம்.டி.ஏ.,) பாரம்­ப­ரிய கட்­ட­டங்கள் பாது­காப்பு குழு அமைக்­கப்­பட்­டது. கடந்த, 2010ம் ஆண்டு இந்த குழு­வினர் கணக்­கெ­டுப்பை துவக்­கினர்.

இதில் தெரி­ய­வந்த விவ­ரங்கள் அடிப்­ப­டையில், 350 கட்­ட­டங்கள் ஆய்வு செய்து, முதல் கட்­ட­மாக, 66 கட்­ட­டங்கள் அடங்­கிய வரைவு பட்­டியல் இறுதி செயப்­பட்­­டது.சி.எம்.டி.ஏ., இணை­ய­ த­ளத்தில் ஜூன் மாதம் இந்த பட்­டியல் வெளி­யி­டப்­பட்­டது. முதல் பட்­டி­யலில், ராய­புரம் ரயில் நிலையம், ஐகோர்ட், அண்ணா பல்­கலை பிர­தான கட்­டடம், திரு­வான்­மியூர் மருந்­தீஸ்­வரர் கோவில் உள்­ளிட்ட, 20 கட்­ட­டங்கள் முதல் நிலை கட்­ட­டங்­க­ளாக வகை­ப­டுத்தப் பட்­டுள்­ளன.
வரவில்லை இதன் மீது பொது மக்கள் தங்கள் கருத்­து­களை ஜூலை, 15ம் தேதிக்குள் தெரி­விக்க வேண்டும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், எதிர்­பார்த்­த­தை­விட குறைந்த எண்­ணிக்­கை­யி­லேயே பொது மக்­க­ளிடம் இருந்து கருத்­துகள் வந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இதை அடுத்து, பொது மக்கள், கட்­ட­டங்­களின் உரி­மை­யா­ளர்கள் தெரி­வித்த கருத்­துக்கள் அடிப்­ப­டையில், அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு குழும கூட்­டத்தில் தாக்கல் செய்­யப்­பட வேண்டும். இதற்கு குழும கூட்­டத்தில் ஒப்­புதல் கிடைத்­தபின், அரசின் ஒப்­பு­த­லுக்கு அனுப்­பட்டு பாரம்­ப­ரிய கட்­ட­டங்­களின் முத­லா­வது இறுதி பட்­டியல் அர­சி­தழில் வெளியி­டப்­படும் என்­பது சி.எம்.டி.ஏ.,வின் நடை­மு­றை­யாக உள்­ளது.

இறுதி கட்­டத்தில்...இதுகுறித்து சி.எம்.டி.ஏ., உய­ர­தி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: இந்த நடை­மு­றை­யின்­படி, முத­லா­வது வரைவு பட்­டியல் குறித்த கருத்­துக்கள் தொகுக்­கப்­பட்டு இறுதி அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இது வரும், 15ம் தேதி நடக்க உள்ள குழும கூட்­டத்தில் தாக்கல் செய்­யப்­பட்டு, இறுதி ஒப்­பு­த­லுக்­காக அர­சுக்கு விரைவில் அனுப்­பப்­படும். அதன் பின், 66 கட்­ட­டங்கள் பாரம்­ப­ரிய கட்­ட­டங்­க­ளாக அதி­கா­ரப்­பூர்­வ­மாக அர­சி­தழில் அறி­விக்­கப்­படும்.

சுமார், 50 பாரம்­ப­ரிய கட்­ட­டங்கள் அடங்­கிய இரண்­டா­வது வரைவு பட்­டியல் இறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதுகுறித்து கட்­ட­டங்­களின் உரி­மை­யா­ளர்கள், நிர்­வா­கிகள் ஆகி­யோ­ரிடம் தனித்­த­னி­யாக கருத்­து­களை பெறு­வ­தற்­கான கடி­தங்கள் அனுப்­பப்­பட உள்­ளன.பொது மக்கள் கருத்­துக்­களை பெறு­வ­தற்­காக இந்த வரைவு பட்­டி­யலும் விரைவில் வெளி­யி­டப்­படும். இவ்­வாறு, அவர் கூறினார்.