தினமலர் 15.10.2013
பேனர்களை உடனடியாக அகற்ற நகராட்சி உத்தரவு
புதுச்சேரி : புதுச்சேரி நகரப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை இன்றைக்குள் (15ம் தேதி) அகற்ற வேண்டும் என, நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் பேனர்கள் மற்றும் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்களுக்கு எவ்வித அனுமதியும் வழங்கப்பட வில்லை. எனவே, அவர்கள் இன்று (15ம் தேதி) மாலைக்குள் பேனர், கட் அவுட்களை அகற்றிக்கொள்ள வேண்டும்.அப்படி அகற்றாவிட்டால், சீனியர் எஸ்.பி., தலைமையில் அகற்றப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.