Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விதிமீறல்: கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. "சீல்'

Print PDF

தினமணி            22.10.2013

விதிமீறல்: கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. "சீல்'

சென்னை வேளச்சேரி பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்டு வந்த வணிக கட்டடத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ) அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.

இது குறித்து சி.எம்.டி.ஏ. வெளியிட்ட செய்தி: வேளச்சேரி லட்சுமிபுரம் திரெüபதி அம்மன் கோயில் தெருவில் தரைதளம் மற்றும் முதல் தளம் கட்ட சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்று குடியிருப்புக்கான கட்டடம் கட்டப்பட்டது.

ஆனால் விதிமுறைக்கு மாறாக அதன் உரிமையாளர் 2-ஆவது தளமும், 3-ஆவது தளத்தில் ஒரு பகுதியும் கட்டி, வணிக பயன்பாட்டுக்காக பயன்படுத்தி வந்தார். இது குறித்து கடந்த மார்ச் மாதம் பணியை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனால் 3-ஆவது தளத்தில் தொடர்ந்து கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததையடுத்து, அதன் உரிமையாளர் வசித்து வந்த பகுதியை தவிர்த்து கட்டடத்துக்கு திங்கள்கிழமை சீல் வைத்து மூடப்பட்டது என்று அந்த செய்திக் 

குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.