Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கருவேல மரங்கள் வளர்க்க தடை

Print PDF

தினமலர்          22.10.2013

கருவேல மரங்கள் வளர்க்க தடை

மதுரை: மதுரை நகரில் தனியார் இடங்களில், நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்ட கருவேல மரங்களை வளர்க்க மாநகராட்சி தடை விதித்துள்ளது.

இதற்கு முன் வளர்ந்திருந்தால், உடனே அகற்ற வேண்டும். இல்லையேல், மாநகராட்சி மூலம் அகற்றப்பட்டு, செலவுத் தொகையுடன் அபராதத் தொகையும் வசூலிக்கப்படும். குறைந்தபட்ச அபராத தொகையாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் இடங்களை தவிர, மாநகராட்சி மற்றும் அரசு சார்ந்த இடங்களில்தான், நிறைய கருவேல மரங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.