Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உடுமலை கடைகளில் 326 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

Print PDF

தினகரன்          25.10.2013

உடுமலை கடைகளில் 326 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

உடுமலை,:கடைகளில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார்,சுகாதார ஆய்வாளர்கள்  செல்வம்,சிவகுமார், ஆர்.செல்வம் ஆகியோர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் உத்தரவின் பேரில் இந்த சோதனை நடந்தது. அதில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ் டிக் டம்ளர்கள் சுமார் 326 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அதை வைத்திருந்த வியாபாரிகளுக்கு ரூ.5300 அபராதம் விதிக்கப்பட்டது.

40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளர்களை விற்பனை செய்யக்கூடாது என்றும்,இலவசமாக பிளாஸ்டிக் பைகளை வழங்க கூடாது என்றும் தவறும் பட்சத்தில் அபராதமும், கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Last Updated on Friday, 25 October 2013 11:48