தினகரன் 30.10.2013
விளம்பர பலகைகள் அகற்றம்
மதுரை, : மதுரை மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாக பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்யும் வகையில் வைக்கப்பட்ட அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்ற கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து 957 விளம்பர பலகைகளை வருவாய்த்துறை துணை கலெக்டர்கள் தலைமையி லும், மாநகராட்சி உதவி ஆணையாளர் சேர்ந்து அகற்றினர். பொதுமக்களுக்கு இடையூ றாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பல கைகளை வைத்தவர்களே தானாக முன்வந்து அகற்ற வேண்டும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.