தினமலர் 06.11.2013
பசுமை பூங்கா மேயர் ஆய்வு
திருச்சி: பசுமை பூங்கா அமையவுள்ள இடத்தை, மேயர் ஜெயா ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி மாநகராட்சி சார்பில் பஞ்சப்பூரில், 5 ஏக்கரில் பசுமை பூங்கா அமைக்கப்படவுள்ளது. இந்த இடத்தை மேயர் ஜெயா ஆய்வு செய்தார். மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி, துணைமேயர் ஆசிக்மீரா மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
மூலிகைச் செடிகள், தியான மண்டபம், சிறிய அளவில் விலங்கியல் பூங்கா, ஏழு உலக அதிசயங்களின் மாதிரிகள், சிறுவர் ரயில் ஆகியவை அமைக்க ஏற்பாடு செய்யுமாறு, அதிகாரிகளை மேயர் ஜெயா வலியுறுத்தினார்.