Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நவ.25ம்தேதி முதல் டிச.4 வரை விரைவு பட்டா மாறுதல் முகாம்

Print PDF

தினகரன்          20.11.2013

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நவ.25ம்தேதி முதல் டிச.4 வரை விரைவு பட்டா மாறுதல் முகாம்

தூத்துக்குடி, : தூத்துக்குடி மாநகராட்சிப்பகுதியில் நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை விரைவு பட்டா மாறு தல் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் தாலுகா வாரியாக கடந்த மாதம் முழுவதும் விரைவு பட்டா மாறுதல் முகாம் நடத்தப்பட்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக பட்டா கிடைக்காமால் உள்ள மனுக்களுக்கு இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

தற்போது நகர நிலவரித் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து இந்த முகாம்களை நடத்த வேண்டும். மனுக்கள் அளிக்கும் மக்களிடம், தங்களுடைய ஆவணங்களை தொடர் ஆவணங்களாக முறையாக அளிக்க வேண் டும் என அறிவுறுத்த வேண் டும்.  அதிகமான மக்கள் வரும் இடங்களில் விரைவில் மனுக்களைப் பெற்று அவர்களிடம் மனுவைப் பெற்றுக் கொண்ட ரசீதுகளை வழங்க வேண்டும்.

வருவாய்த் துறை பணியாளர்கள் முழுமையாக இந்த பட்டா மாறுதல் முகாம்களில் பணியாற்ற வேண்டும். மாவட்ட நிர்வா கம் மூலம் நடைபெ றும் இந்த பணிகளுக்கு அனைத் துத் துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.