தினகரன் 21.11.2013
மத்திய பேருந்து நிலையத்தில் அசுத்தப்படுத்தினால் அபராதம்
திருச்சி, : திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வா கம் அறிவித்துள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று மாநகராட்சி மேயர் ஜெயா, ஆணையர் தண்டபாணி ஆகியோர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மத்திய பேருந்து நிலையத்தில் ரூ.13.50 லட்சம் மதிப்பில் நம்ம கழிவறை கட்டப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்தனர். ரூ. 11 லட் சம் மதிப்பில் நடைபெற்று வரும் கண்காணிப்பு கோபுர கட்டிட வேலை களையும் பார்வையிட்டனர். கண்காணிப்பு கோபுரம் கட்டிடத்தில் கலை அம்சங் கள் கொண்ட ஓவியங்கள் வடிவமைக்க வேண்டும். சுயஉதவி குழு மூலம் சுற் றுலா தகவல் மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று மேயர் ஆலோசனை அளித்தார்.
மத்திய பேருந்து நிலையத்தில் ஏற்கனவே 2 இடங்களில் ஆண்களுக்காகவும், ஒரு இடத்தில் பெண்களுக்காகவும் இலவச கழிவறை கள் பயன்பாட்டில் உள் ளது. மேலும் 3 இடங்களில் கட்டண கழிவறைகளும் உள்ளன. இந்த அனைத்து கழிவறைகளும் தற்பொழுது மைக்ரோ ஆர்கனிஸம் என் னும் தண்ணீர் கலந்து மருந்து தெளிக்கப்பட்டு துர்நாற்றம் இல்லாத வகை யில் பராமரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகவே மத்திய பேருந்து நிலையத்தில் சுற்று ப்புற சுகாதாரத்தை காத் திட திறந்த வெளியில் சிறு நீர் கழித்திட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி தொடர்ந்து மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். அந்த இடத்தி லேயேரசீதும் வழங்கப் படும். இதே போல் மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளி லும் திறந்த வெளி யில் சிறு நீர் கழிப்பதை தடுத்திட முக்கிய இடங்க ளில் சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்படவுள்ளன.
மாநகர மக்கள் சுற்றுப்புற சுகாதாரத்தை தூய்மையாக பராமரித்திட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆணையர் தண்ட பாணி தெரிவித்தார். ஆய்வின்போது துணை மேயர் மரியம் ஆசிக், பொன்மலை கோட்டத்தலைவர் மனோகரன், செயற்பொறியாளர் நாகேஷ், உதவி செயற்பொறியாளர் லெட்சுமணமூர்த்தி ஆகி யோர் உடன் இருந்தனர்.திருச்சி,: சமயபுரம் அருகே இருங்களூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் டி.ஆர்.பி. பொறியியில் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார் பில் நடைபெற்ற இந்த முகாமை கல்லூரி தனி அதிகாரி பாண்டியராஜன் துவக்கி வைத்தார். முகா மில் கல்லூரியில் நான்காம் ஆண்டு பி.இ.படிக்கும் எந்திர பொறியி யல், மின் னியல்- மின்னணு பொறியி யல் பிரிவு மாணவர்கள் 50 பேர் கலந்து கொண்டனர். இதில் 7 பேர் தேர்ந்தெடுக் கப்பட்டனர். அவர்களுக்கு கல்லூரி முதல்வர் தமிழ ரசன் தனியார் நிறுவனத் தின் பணி நியமன ஆணை களை வழங்கினார். நிகழ்ச் சியில் தனியார் நிறுவன அதிகாரிகள் கார்த்திக், சிவ குமார், சார்லஸ், சரவணன், கல்லூரி துணை முதல்வர் பிரபாகர்,கல்லூரி பணி அமர்த்துதல் பிரிவு அதிகா ரியும், உதவி பேராசிரியரு மான விக்டர்சூசை இருதய ராஜ், துறைத்தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.