Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினகரன்            22.11.2013

மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

பவானி, :  பவானி நக ராட் சியின் சாதாரணக் கூட்டம் தலைவர் கருப் பணன் தலைமையில் நேற்று நடை பெற்றது. துணைத் தலைவர் ராஜேந் திரன், ஆணையாளர் ராஜேஸ்வரி, பொறியாளர் பேரின்பம், துப்புரவு அலுவலர் சிவக் குமார் மற்றும் அலு வ லர்கள் முன்னிலை வகித் தனர். கூட் டத்தில் பெரும் பாலான உறுப் பி னர்கள் நாய்த் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலி யு றுத் தினர்.

முத்துசாமி (அதிமுக) : நக ராட்சிப் பகுதியில் அதிகளவு நாய்கள் பெரு கி யுள்ளது. அதே போன்று, ஒரு சில பகு தி களில் பன்றிகள் நட மாட் டமும், போக் கு வ ரத் துக்கு இடையூறாக குதி ரை களும் நின்று கொண் டுள்ளன.

சரவணக்குமார் (திமுக) : நடந்து செல்வோரைக் கடிப் பதும், பைக்கில் துரத் து வதும் நாய்களின் வேலையாக உள்ளது.

சத்தியமூர்த்தி (திமுக) : எனது வார்டில் இரண்டு பேரை தெரு நாய்கள் கடித் துள்ளன. உட ன டியாக நாய்த் தொல் லையைப் போக்க நட வ டிக்கை எடுக்க வேண்டும். நாய்களைப் பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் சென்று விட வேண்டும்.

கவிதா சந்திரன் (திமுக): தெரு வி ளக் குகள் இருந்தும் இரவு நேரங் களில் எரி வ தில்லை. இது கு றித்து, அதி காரிகளுக்கு தெரி வித்தும் எவ்வித நட வ டிக் கையும் எடுப்பதில்லை.

துப்புரவு அலுவலர் சிவக் குமார் : நகரில் பெரும் பாலான நாய் களுக்கு இனப் பெ ருக்கத் தடை அறுவை சிகிச்சை செய் யப் பட் டுள்ளது. விரைவில் அனைத்து நாய் க ளையும் பிடிக்க நட வ டிக்கை எடுக் கப் படும். தெருவில் குதிரைகள், மாடுகள் என கால் ந டைகள் இடை யூ றாகத் திரிந்தால் அவை நகராட்சி ஊழி யர் களால் பிடிக் கப் ப டு வதோடு, உரி மை யா ளர் களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

ராஜசேகர் (அதிமுக) : 1வது வார்டில் கடந்த 5 நாட்களாக தெரு வி ளக் குகள் எரி ய வில்லை. மின்சாரம் இருந் த போ திலும் இப்பகுதி இருளில் மூழ்கியுளளது.

ஆறுமுகம் (அதிமுக) : 16வது வார்டு முத் து மா ரி யம்மன் கோயில் பகுதியில் ஒரு வீட்டுக்கு குடிநீர் குழாயில் 3 குடம் மட்டுமே தண்ணீர் கிடைக் கிறது. மின்சாரம் இல்லாத நேரத்தில் குடிநீர் விநி யோ கிக் கப் பட்டால் அனைத்துப் வீடு களிலும் தண்ணீர் போதுமான அளவு கிடைக் கிறது. மின் மோட்டார் கொண்டு தண்ணீர் உறிஞ் சு வதால் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது.

தலைவர் கருப் பணன் : பொது மக் களுக்கு இடையூறாக உள்ள தெரு நாய் களைப் பிடிக்க நட வ டிக்கை எடுக் கப் படும்.

 நகரில் வீடு களுக்கு வழங் கப் பட் டுள்ள குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ் சு வதாக புகார் எழுந் துள்ளது. அனைத்து வீடு களுக்கும் சமமான அளவு தண்ணீர் விநி யோ கிக்க வேண்டும். விதி களுக்கு புறம்பாக மின் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ் சினால் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதோடு, குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும், என்றார்.

பவானி நகராட்சி 27வது வார்டில் மெயின்ரோடு, செல் லி யாண் டி யம்மன் கோயில் ரோடு, முன்னாள் எம்எல்ஏ சவுந் தி ர ராஜன் வீடு முன்பாக சாக்கடை, அரிமா சங்க கட்டடம் முதல் ஐயப்பா மண்டபம் வரை காவேரி வீதியில் சாக்கடை அமைக்கக் கோரி திமுக கவுன் சிலர் ஜெயப் பிரகாஷ் மனு அளித்தார்.

இக் கூட் டத்தில், ஐயூடிஎம் திட் டத்தில் சொக் க ரா யன்காடு மற்றும் குரு நா த க வுண்டர் வீதி, மீனாட்சி கல்யாண மண்டப வீதி, வர் ண புரம் 1, 2, 3 மற்றும் 4வது வீதிகள், வார்டு 12, 15 மற்றும் 16ல் உள்ள மார்க்கெட் ரோடு, மண் தொழிலாளர் வீதி 2 மற்றும் 3வது வீதியில் தலா ரூ.50 லட்சம் வீதம் மொத்தமாக ரூ.2 கோடிக்கு தார்ச்சாலை பரா ம ரித்தல் பணிகள் மேற் கொள்தல் உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.