Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கால்நடை வளர்க்க உரிமம் கட்டாயம் திருச்சி மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

Print PDF

தினமலர்             30.11.2013 

கால்நடை வளர்க்க உரிமம் கட்டாயம் திருச்சி மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

திருச்சி: ""திருச்சி மாநகர பகுதிகளில் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே கால்நடைகள் வளர்க்க முடியும்,'' என, மாநகராட்சி அறிவித்துள்ளது.

திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், திருச்சி மாநகராட்சி சட்டம், விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டம் ஆகியவற்றின் படி, திருச்சி மாநகராட்சியில் கால்நடைகள் பராமரிப்பு, கட்டுப்பாடுகள், வளர்க்கும் இடங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில், உரிம கட்டணம், அபராத கட்டணங்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் திருச்சி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் நகல் திருச்சி மாநகராட்சி பொது சுகாதார பிரிவில் அதற்கான கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அனுமதித்த இடங்கள் தவிர, இதர இடங்களில் மாடுகள், ஆடுகள், கழுதைகள் வளர்க்க கூடாது. கால்நடைகளை பாதுகாவலர் இன்றி சாலைகளில் அலைய விடக்கூடாது. அலையவிட்டால், அந்த கால்நடைகள் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு பொது ஏலம் விடப்படும். மாநகராட்சி எல்லைக்குள் பன்றி, குதிரைகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகள் வளர்ப்போர் 14 நாளுக்குள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி உரிமம் பெற்று மட்டுமே கால்நடைகளை வளர்க்க வேண்டும். கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிய விடக் கூடாது. பன்றி, குதிரைகளை மாநகராட்சி எல்லையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.