Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் கலெக்டர் மு.கருணாகரன் அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி             04.12.2013

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் கலெக்டர் மு.கருணாகரன் அறிவிப்பு

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் அரசு அனுமதி இன்றி அமைக்கப்பட்டு இருக்கும் விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கலெக்டர் மு.கருணாகரன் அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

அகற்ற வேண்டும்

நெல்லை மாநகராட்சி எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு உத்தரவுக்கு முரணாகவும், அரசு அனுமதி இன்றியும் தனியார் நிறுவனங்கள் விளம்பர பலகைகளை நிறுவி உள்ளனர். அரசு அனுமதி இன்றி நிறுவப்பட்டு இருக்கும் விளம்பரப் பலகைகளை நாளை 5–ந் தேதி வியாழக்கிழமைக்குள் தாங்களே முன்வந்து அகற்ற வேண்டும்.

இல்லை என்றால் மறுநாள் அதாவது 6–ந் தேதி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, போலீஸ் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து விளம்பர பலகைகள் அகற்றப்படும். அதற்குரிய செலவுத் தொகையை அந்தந்த நிறுவனத்திடமிருந்து வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சேதங்களுக்கு..

விளம்பரப் பலகைகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், விளம்பரப் பலகைகளின் பொருட்சேதங்களுக்கு அரசு பொறுப்பேற்காது. எனவே தனியார் நிறுவனங்கள் அரசு அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.இவ்வாறு கலெக்டர் மு.கருணாகரன் தெரிவித்து உள்ளார்.