Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சத்தி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினகரன்             04.12.2013

சத்தி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சத்தியமங்கலம், : சத்தியமங்கலம் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கோபி சப்கலெக்டர் சந்திரசேகர் சாகமுரியின் உத்தரவின்பேரில் கோபி, பவானி பஸ்நிலையங்களில் கடைக்காரர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன.

இதைத்தொடந்து சத்தியமங்கலம் பஸ்நிலையத்திலும் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக எழுந்த புகாரையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனால் ஒரு சில கடைக்காரர்கள் ஆக்கிரமித்த பகுதிகளை தானாகவே முன்வந்து அகற்றினர். இதற்கிடையே நேற்று நகராட்சி அலுவலக ஊழியர்கள் பஸ்நிலைய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Last Updated on Wednesday, 04 December 2013 09:15