தினகரன் 04.12.2013
பல்லடத்தில் 400 டயர்கள் அழிப்பு
பல்லடம், திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்குகாய்ச்சல் முன்னேச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள திருப்பூர் மாவட்ட துணை இயக்குனர் ரகுபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து பல்லடம் நகராட்சி ஆணையாளர் நாராயணன் முன்னிலையில் வட்டார மேற்பார்வையாளர் சண்முகநாதன், துப்பு ரவுஆய்வாளர் சரவணன், சுகாதாரஆய்வாளர்கள் முத்துபையன், தமிழ்ச்செல்வி, ரகுநாதன், ஜெயராமன். துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பனப்பாளையம், நால்ரோடு, அண்ணாசிலை, செட்டிபாளையம்ரோடு உள்ளிட்ட பகுதியில் அதிரடியாக சோதனை செய்து சுமார் 400க்கும் மேற்பட்ட டயர்களை அழித்தனர்.