தமிழ் முரசு 06.12.2013
குடிநீர் கட்டணம் கட்டாததால் 25 வீடுகளில் இணைப்பு துண்டிப்பு
பொன்னேரி:திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. வீடுகளுக்கு 1001 குடிநீர் இணைப்புகள் உள்ளன. முறையாக குடிநீர் கட்டணம் செலுத்தாததால் கடந்த 5 மாதத்திற்கு முன்பு இரண்டு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இருப்பினும் சிலர் சரிவர குடிநீர் கட்டணம் கட்டவில்லை.
இதைத் தொடர்ந்து சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு பயன்படுத்தும் நபர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி கட்டணத்தை செலுத்துமாறு பேரூராட்சி நிர்வாகம் வற்புறுத்தியது.
ஆனாலும் 999 இணைப்பு தாரர்கள் பணம் கட்டவில்லை. இதனால் நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் தேவதாஸ், துப்புரவு மேற்பார்வையாளர் மதியழகன், பேரூராட்சி ஊழியர்கள், பொன்னேரி போலீஸ் உதவியுடன் 1&வது வார்டுக்கு உட்பட்ட சின்னகாவனம் பகுதியில் 25 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை துண்டித்தனர். மேலும் கட்டணம் கட்டாத நபர்கள் உடனடியாக கட்ட வேண்டும் அல்லது இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.