Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உடுமலை 14 -ஆவது வார்டில் நகராட்சித் தலைவர் ஆய்வு

Print PDF

தினமணி              10.12.2013

உடுமலை 14 -ஆவது வார்டில் நகராட்சித் தலைவர் ஆய்வு

உடுமலை நகராட்சி 14 ஆவது வார்டுக்கு உள்பட்ட பகுதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து நகராட்சித் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

உடுமலை நகராட்சி, 14 வது வார்டுக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுக் குடிநீர் குழாய்களில் குடிநீர் சரிவர வருவதில்லை எனவும், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்தும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந் நிலையில் உடுமலை நகராட்சித் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர், இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், குடிநீர் விநியோகம் சீரமைப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் நகராட்சித் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா பொதுமக்களிடம் உறுதி அளித்தார். ÷நகர்நல அலுவலர்(பொ) எம்.இளங்கோவன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஹக்கீம், ஆ.ஆதம்ஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.