தினகரன் 12.12.2013
கொசு உற்பத்தியை தடுக்க வீடுகளில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டுகோள்
புதுச்சேரி, : கொசு உற்பத்தியை தடுக்க வீடுகளில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுவை சுகாதாரத்துறை செயலர் ராகேஷ்சந்திரா வெளி யிட்ட செய்திக் குறிப்பு:
புதுவையின் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கு விட்டுவிட்டு மழை பெய்வதாலும், வரும் காலங்களில் மழை பெய்ய இருப்பதாலும் மேலும் புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மக்களிடையே ஒரு சில இடங்களில் உள்ளதாலும் பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீட்டிலும், வீட்டை சுற்றிலும் மற்றும் பொது இடங்களிலும் தேவையற்ற பழைய டயர்கள், உடைந்த பானைகள், பிளாஸ்டிக் பொருட்கள், ஆட்டுஉரல்கள் மற்றும் தேங்காய் ஓடுகள், சிமெண்ட் தொட்டிகள் போன்றவற்றில் மழைநீர் தேங்கி அதில் டெங்கு நோயை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகாமல் அப்புறப்படுத்துமாறும், காய்ச்சல் இருப்பின் அருகிலுள்ள அரசு மருத் துவமனைகளில் மருத்துவர் ஆலோசனையை பெற்று பயன்பெற வேண்டும்.
பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் காய்ச்சல் அனைத்தும் டெங்கு காய்ச்சல் அல்ல. காய்ச்சல் இருப்பின் மருத்துவ ஆலோசனை அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.