தினமலர் 16.12.2013
அடுத்த ஆண்டு நகராட்சி பகுதிகளுக்கு விலையில்லா பொருட்கள்: சம்பத் உறுதி
நெல்லிக்குப்பம்:""கல்வியில் முன்னேறினால் தான் ஒரு சமுதாயம் முன்னேற முடியும் என்பதால் இந்த ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது'' என அமைச்சர் சம்பத் பேசினார். நெல்லிக்குப்பம் அடுத்த பாலூரில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடந்தது.டி.ஆர்.ஓ., மனோகரன் தலைமை தாங்கினார். ஆவின் மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். பாலூர் ஊராட்சித் தலைவர் சரவணன் வரவேற்றார்.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மல்லிகா, ஒன்றிய தலைவர் சுந்தரி, துணைத் தலைவர் சம்பந்தம், மாவட்ட கவுன்சிலர் லோகநாயகி, ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபன், பேரூராட்சி தலைவர் அர்ச்சுனன், தாசில்தார் குமுதம், பி.டி.ஓ., துரைசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
அமைச்சர் சம்பத் பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கிப் @ப”கையில், "இதுபோன்ற விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டங்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. நடப்பு ஆண்டில் 2,000 @காடி ரூபாய் மதிப்பில் 35 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்க உள்ளோம்.
இந்த ஆண்டு கிராமப் பகுதிகள் முழுவதும் கொடுத்து முடிக்கப்படும். அடுத்த ஆண்டு நகராட்சி பகுதிகளுக்கு வழங்கப்படும். கல்வியில் முன்னேறினால் தான் ஒரு சமுதாயம் முன்னேற முடியும் என்பதால் இந்த ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இத்திட்டங்களைப் பயன்படுத்தி மக்கள் முன்னேற வேண்டும்' என்றார்.