Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வணிக வளாகத்திற்கு சீல் வைக்க ஆணையர் உத்தரவிட்டார்

Print PDF

தினகரன்            18.12.2013

வணிக வளாகத்திற்கு சீல் வைக்க ஆணையர் உத்தரவிட்டார்

ஒரு வணிக வளாகத்திற்கு வரி பாக்கி ரூ.44 லட்சம் இருந்தது. இதற்காக மாநகராட்சி நோட்டீஸ் அளித்தும் பயனில்லை. இதனால் அந்த வணிக வளாகத்திற்கு சீல் வைக்க ஆணையர் கிரண்குராலா அதிரடியாக உத்தரவிட்டார். மேற்கு மண்டல உதவி ஆணையர் ரெகோபயாம் தலைமையில் அதிகாரிகள் வணிக வளாகத்தை இழுத்து மூடி சீல் வைக்க சென்றனர். இதனால் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது. இதன் பிறகு ரூ. 11 லட்சத்திற்கு செக் அளித்து, மீத தொகையை ஒரு மாத வாய்தா வாங்கியதின்பேரில் சீல் வைப்பு நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.