தினகரன் 31.12.2013
மாநகராட்சியில் மக்கள் குறைதீர்கும் நாள் கூட்டம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
திருச்சி, : திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க் கும் நாள் கூட்டம் மேயர் ஜெயா தலைமையில் நடைபெற்றது.
இதில் சாலை மேம்பாடு, ஆக்கிரமிப்பு அகற்றம், பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைப்பது, கழி வறை மற்றும் பூங்காக்கள் பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 12 மனுக்கள் பெறப்பட் டன. மனுக்களைப் பெற் றுக் கொண்ட மேயர், போக்குவரத்துக்கு இடை யூறாக சாலை மற்றும் முக் கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடி யாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், பழுதடைந்த தெரு விளக்குகளை விரை ந்து பழுது நீக்கம் செய்திட வும், பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உரிய தள ஆய்வு மேற் கொண்டு முழுமை யான நடவடிக்கை எடுப்பதோடு இதுகுறித்து மனுதாரர்களு க்கு பதில் அனுப்ப வேண் டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் நகர பொறியாளர் சந்திரன், நகர் நல அலுவலர் மாரியப்பன், செயற்பொறியாளர்கள் அருணாசலம், நாகேஷ், உதவி ஆணையர்கள் தன பால், தயாநிதி, பிரபுகுமார் ஜோசப், உதவி செயற்பொறியாளர்கள் பாலகுருநாதன், கண்ணன், அமுதவள்ளி, லட்சுமணமூர்த்தி, குமரே சன், திட்டப்பிரிவு உதவி செயற்பொறியாளர் கள் சிவ பாதம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.