Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் வாடகை கட்டணம் 5 மடங்கு உயர்கிறது

Print PDF

தினகரன்            31.12.2013

மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் வாடகை கட்டணம் 5 மடங்கு உயர்கிறது

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபங்களுக்கு வாடகை கட்டணத்தை உயர்த்த மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் தலைமை தாங்கினார். துணை மேயர் பழனிச்சாமி, ஆணையாளர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேற்றைய சாதாரண கூட்டத்தில் 74 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில் 8வது தீர்மானமாக மாநகராட்சி மண்டபத்திற்கு கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான விசிடிவி ரோட்டில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபம் மற்றும் தமயந்திபாபுசேட் திருமண மண்டபம் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

இந்த மண்டபங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு 19 ஆண்டுகள் ஆன நிலையில் நகரில் அமைந்துள்ள இதர திருமண மண்டபங்களுக்கு பலமடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாலும், மண்டபங்களின் பராமரிப்பு செலவு, காவலர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டும் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

அதன்படி மாநகராட்சி திருமண மண்டபத்திற்கு முதல்நாள் காலை 6 மணி முதல் மறுநாள் மதியம் 3 மணி வரை 3 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை 15 ஆயிரம் ரூபாயாகவும், முதல் நாள் பிற்பகல் 3 மணி முதல் மறுநாள் பிற்பகல் 3 மணி வரை 2,500 ரூபாய் கட்டணத்தை 12 ஆயிரத்து 500 ரூபாயாகவும், பகல் 12 மணி முதல் இரவு 12 மணி வரை, இரவு 12 மணி முதல் பகல் 12 மணி வரை 1,250 ரூபாய் கட்டணத்தை 6 ஆயிரத்து 250 ரூபாயாகவும், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், இதர தொண்டு நிறுவனங்களுக்கு கூட்டம் நடத்த (முகூர்த்தம் இல்லாத நாட்களில் மட்டும்) 8 மணி நேரத்திற்கு 400 ரூபாயை 2 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமயநதிபாபுசேட் திருமண மண்டபத்திற்கு முதல்நாள் காலை 6 மணி முதல் மறுநாள் மதியம் 3 மணி வரை 2 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை 10 ஆயிரம் ரூபாயாகவும், முதல் நாள் பிற்பகல் 3 மணி முதல் மறுநாள் பிற்பகல் 3 மணி வரை 1,500 ரூபாய் கட்டணத்தை 7 ஆயிரத்து 500 ரூபாயாகவும், பகல் 12 மணி முதல் இரவு 12 மணி வரை, இரவு 12 மணி முதல் பகல் 12 மணி வரை 750 ரூபாய் கட்டணத்தை 4 ஆயிரம் ரூபாயாகவும், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், இதர தொண்டு நிறுவனங்களுக்கு கூட்டம் நடத்த (முகூர்த்தம் இல்லாத நாட்களில் மட்டும்) 8 மணி நேரத்திற்கு 250 ரூபாயை 1,500 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் கட்டணமாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.