தினமலர் 03.01.2014
நகராட்சி நோட்டீஸ்
தேனி: தேனி புது பஸ்ஸ்டாண்டில் கடைகளை ஏலம் எடுத்தவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி வருகிறது. தேனி புதுபஸ்ஸ்டாண்டில் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. போக்குவரத்துக்கழகம் சார்பில் அம்மா குடிநீர் கூட விற்பனை தொடங்கப்படவில்லை.
இதனால் பொதுமக்கள் எந்த பொருட்களும் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். குடிநீர் கூட கிடைக்காமல் தவிக்கின்றனர். இதனை தொடர்ந்து கடைகளை விரைவில் திறக்க ,நகராட்சி நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதில் முதற்கட்டமாக கடைகளை ஏலம் எடுத்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வருகிறது. அதில் கடைகளை ஏலம் எடுத்த ஏலதாரர்கள், ஒரு ஆண்டு வாடகை கட்டணம் மற்றும் சேவை வரி, உறுதிமொழி படிவத்தை நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பித்து சாவியை பெற்று கடைகளை திறக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.