தினமணி 04.01.2014
நகராட்சிப் பள்ளியில் கல்வி அலுவலர் ஆய்வு
ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் தர்ம ராஜா கோவில் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ம.பொ.கணேசன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாணவர்களிடையே கணிதப்பாடம் குறித்தும், வாசிப்புத் திறன் குறித்தும், பாடல்கள் பாடுவது குறித்தும் கேள்விகளைக் கேட்டார். மாணவர்கள் அதற்குண்டான பதில்களை அளித்தனர். பின்னர் பள்ளியின் போதிக்கும் திறன் குறித்தும் ஆய்வு செய்தார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மோகன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி, பள்ளி தலைமையாசிரியர் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.