தினமணி 04.01.2014
குடிநீர் வரி செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு: மாநகராட்சி எச்சரிக்கை
திருநெல்வேலி மாநகராட்சியின் கீழ் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள், தங்களது குடிநீர் வரியை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வரும் துண்டுப்பிரசுர விவரம்:
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட குடியிருப்புதாரர்கள் தங்களது சொத்துக்களுக்கு 31-3-2014 வரை செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர்க் கட்டணம், காலிமனை வரி, தொழில்வரி ஆகியவற்றை இன்றைய தேதிக்குள் செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செலுத்தப்படாமல் இருந்தால் உடனே வரிகளைச் செலுத்தி ரசீதுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.