Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆத்தூரில் இன்று எரிவாயு தகன மேடையை பராமரிக்க கலந்தாய்வு கூட்டம்

Print PDF

தினகரன்             06.01.2014

ஆத்தூரில் இன்று எரிவாயு தகன மேடையை பராமரிக்க கலந்தாய்வு கூட்டம்

ஆத்தூர்,: ஆத்தூரில் ரூ90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையை பராமரிக்க கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. நகராட்சி ஆணையளர்(பொ) ஜெகதீஸ்வரி விடுத்துள்ள அறிக்கை:

ஆத்தூர் நகராட்சியின் மூலம் வீரகனுர் சாலையில் பராமரிக்கப்பட்டு வரும் இடுகாட்டில் ரூ90 லட்சம் செலவில் புதியதாக நவீனப்படுத்தப்பட்ட எரிவாயு தகன மேடை கட்டப்பட்டுள்ளது. இந்த எரிவாயு தகன மேடையின் ஆண்டு பராமரிப்பு பணியை மேற்கொள்ள ஏதுவாக ஆத்தூரில் உள்ள சேவை சங்கங்களான அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், ரெட்கிராஸ் சங்கம், இன்னர்வீல் மற்றும் பொது நல அமைப்புகளான வணிகர் சங்கம், முத்தாயம்மாள் அறக்கட்டளை, ராசி சீட்ஸ் உள்ளிட்ட அமைப்புகளுடனான கலந்தாய்வு கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் சேவை சங்கத்தினரும், பொதுநல அமைப்பினரும் தவறாமல் கலந்து கெள்ள வேண்டும். இவ்வாறு நகராட்சி ஆணையாளர்(பொ) ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.