தினமணி 14.01.2014
இறைச்சி விற்பனைக்கு தடை
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் திருவள்ளுவர் தினமான ஜனவரி 15-ம் தேதி அன்று இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, ஆடு, மாடு வதை செய்வதும் அன்றைய தினம் தடை செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.