Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூரு மாநகராட்சியின் கடன்களை அடைக்க நடவடிக்கை

Print PDF

தினமணி            24.01.2014 

பெங்களூரு மாநகராட்சியின் கடன்களை அடைக்க நடவடிக்கை

பெங்களூரு மாநகராட்சியின் கடன்களை அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

பெங்களூருவில் நடைபெறும் கர்நாடக சட்ட மேலவைக் கூட்டத்தில் வியாழக்கிழமை நியமன உறுப்பினர் தாரா அனுராதாவின் கேள்விக்குப் பதிலளித்து அவர் பேசியது:

பெங்களூரு மாநகராட்சி கடந்த ஆண்டுகளில் ரூ. 3,420 கோடி கடன் பெற்றுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகை அளிக்கப்படாததால், பெங்களூருவில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளன.

எனவே, பெங்களூரு மாநகராட்சியின் கடன்களை அடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். கடந்த பட்ஜெட்டில் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு ரூ. 1,576 கோடி ஒதுக்கப்பட்டது.

இதில் ரூ. 900 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரூ. 696 கோடியும் விடுவிக்கப்படும். மேலும், கூடுதால ரூ. 300 கோடி வழங்கப்படும். மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 110 கிராமங்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ. 250 கோடி ஒதுக்கப்படும்.

பெங்களூருவின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மேற்கொள்ள அரசு உதவும்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், பெங்களூரு மாநகராட்சி ரூ. 169 கோடி கடன் பெற்றுள்ளது. ஆனால், அதற்கான வட்டியை செலுத்தவில்லை. முந்தைய பாஜக ஆட்சியில் மாநாட்சியில் உள்ள சாலைகள் சீராக அமைக்கவில்லை. இதனால், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன என்றார் சித்தராமையா.