தினமணி 25.01.2014
ஐஏஎஸ் பயிற்சி அலுவலர்கள் திருச்சி மாநகராட்சியில் களஆய்வு
ஐஏஎஸ் பயிற்சி அலுவலர்கள் 17 பேர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் உள்ளாட்சி நிர்வாக நடைமுறைகள் குறித்த களஆய்வுப் பயிற்சியை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனர்.
மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மேயர் அ. ஜெயா, ஆணையர் வே.ப. தண்டபாணி ஆகியோர் ஐஏஎஸ் பயிற்சி அலுவலர்களுக்கு மாநகராட்சி நடைமுறைகளை விளக்கினர்.
சுகாதாரப் பணிகள், குடிநீர் விநியோகம், புதை சாக்கடைத் திட்டம், பிறப்பு- இறப்புப் பதிவு போன்றவை குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது. நகரப் பொறியாளர் ஆர். சந்திரன், செயற்பொறியாளர்கள் எஸ். அருணாசலம், எஸ். நாகேஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஐஏஎஸ் பயிற்சி அலுவலர்கள் குழுவுக்கு ஆட்வர்டு குமார் சிங் தலைமை ஏற்று அழைத்து வந்திருந்தார்.