தினகரன் 25.01.2014
ஆழ்குழாய் கிணற்று பள்ளம் மூடல் தேவகோட்டை நகராட்சி நடவடிக்கை
தேவகோட்டை. : தேவகோட்டை ராம்நகரில் உள்ள அழகப்பா பூங்காவின் மேற்கு தெருவில் நகராட்சி குடிநீர் சப்ளைக்கான போர்வெல் கிணறு உள்ளது.
இதனை பழுது பார்த்து சென்றவர்கள் அந்த குழியை மூடாமல் சென்று விட்டனர். ஆபத்தை அறியா குழந்தைகள் அந்த குழியில் தவறி விழ நேரிடும் என்பதால் அதனை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது குறித்த செய்தி 22ம் தேதியன்று தினகரனில் வெளியானது. அதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆழ்குழாய் பகுதியில் இருந்த பள்ளத்தை முற்றிலுமாக மூடி சரி செய்ததால் பேராபத்து தடுக்கப்பட்டது.