Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொதுநலச் சங்கங்களுடன் மாநகராட்சி கருத்துக்கேட்பு

Print PDF

தினமணி           29.01.2014 

பொதுநலச் சங்கங்களுடன் மாநகராட்சி கருத்துக்கேட்பு

பொதுநல சங்கங்களுடனான கருத்துக் கேட்புக் கூட்டம் சனிக்கிழமை (பிப்.1) நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி: பொதுநலச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கான கருத்து கேட்புக் கூட்டம் ஜன. 25-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் இது ஒத்தி வைக்கப்பட்டது. இந்தக் கூட்டம் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெறும்.

இதில், 1-வது மண்டலம் முதல் 8-வது மண்டலம் வரை உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் பொதுநலச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கருத்துக் கேட்பு கூட்டம் கீழ்ப்பாக்கம் ஜெ.ஜெ. விளையாட்டரங்கில் காலை 9 மணிக்கு நடைபெறும்.

9 முதல் 15-வது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பொதுநலச் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர், இணை மற்றும் துணை ஆணையர்கள், அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் மண்டல அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். இதில் பொதுநலச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு குறைகளை தெரி

விக்கலாம் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.