தினத்தந்தி 29.01.2014
அரகண்டநல்லூரில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்
அரகண்டநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரூராட்சி கூட்டம்
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் ஆர்.வாசிம்ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் ராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில் பேரூராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப் பட்டது. தொடர்ந்து அரகண்ட நல்லூரில் தினசரி ஏற்படும் போக்குவரத்து பிரச்சினைக்கு காரணமாக இருப்பது குறித்தும் விவாதிக் கப்பட் டது.
மதுக்கடையை அகற்ற தீர்மானம்
அப்போது கமிட்டியின் எதிரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங் களை ஓரமாக அமைத்திட மின்வாரியத்துக்கும், போக்கு வரத்துக்கு இடையூறாக உள்ள புளியமரங்களை வெட்டி அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத் துறைக்கும் கடிதம் அனுப்புவது எனவும், அதேபோல் கமிட்டியின் எதிர்புறம் டாஸ்மாக் மது பானக் கடைகள் உள்ள தால் விளை பொருட்களை விற்கும் விவசாயிகள் சிலர் அந்த பணத்தில் குடிக்க செல்வ தால் அவர்கள் வைத் திருக்கும் பணத்தை இழந்து விடுகின்ற னர். இந்த நிலையை போக்க டாஸ்மாக் கடையை உடன் அங்கிருந்து அகற்ற வேண் டும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ரத்னா, ரியாசுதீன், கோபால், சாந்தீஸ் வரி, ஜோன்ஸ், சேகர், ரேவதி, தெய்வக்கன்னு உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.