Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிப்ரவரி 1ம்தேதி நடக்கிறது பொதுநல சங்கங்கள் குறை கேட்பு கூட்டம் மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

தினகரன்                29.01.2014  

பிப்ரவரி 1ம்தேதி நடக்கிறது பொதுநல சங்கங்கள் குறை கேட்பு கூட்டம் மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, :  மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

பொதுநலச் சங்கங்களின் பிரதிநிதிகள் குறைகேட்பு கூட்டம் கடந்த 25ம்தேதி நடத்தப்படுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் வரும் 1ம்தேதி நடத்தப்படுகிறது. அதன்படி மண்டலம் ஒன்று முதல் 8 வரை செயல்பட்டு வரும் பொதுநல சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டம் கீழ்ப்பாக்கம் ஜெ.ஜெ. உள் விளையாட்டரங்கில் காலை 9 மணிக்கு நடைபெறும். மண்டலம் 9 முதல் 15 வரையில் செயல்படும் பொதுநல சங்கங்கள் பிரதிநிதிகளுடனான குறைகேட்பு கூட்டம் நந்தனம் ஒய்.எம். சி.ஏ. மைதானத்தில் அன்றைய தினம் மாலை 3 மணிக்கும் நடக்கிறது.

இதில், மாநகராட்சி ஆணையர், இணை மற்றும் துணை ஆணையர்கள், அனைத்து துறை தலைவர்கள் பங்கேற்கின்றனர்.