Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பகுதி காலி மனைகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வேண்டும்தவறினால் நடவடிக்கை

Print PDF

தினகரன்                29.01.2014 

மாநகராட்சி பகுதி காலி மனைகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வேண்டும்தவறினால் நடவடிக்கை

திருச்சி, : திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள காலி மனைகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று கமிஷனர் தண்டபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மாநகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் காலிமனைகளில் மழைநீர் தேங்கியுள்ளன. இவற்றின் காரணமாக கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே 7 நாட்களுக்குள் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்ற தவறும் காலிமனை உரிமையாளர்கள் மீது சுகாதார நலனுக்கு கேடு விளைவித்ததாக பராமரிப்பு கட்டணம் மற்றும் அபராதத்தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர சார்பதிவாளர் அலுவலகத்தில் தொடர்புடைய காலிமனை சொத்துக்கள் மீது வில்லங்கம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.