Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சிப் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி                30.01.2014  

மாநகராட்சிப் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாநகராட்சிப் பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டடங்களை ஆட்சியர் இரா.நந்தகோபால் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

மாநகராட்சிப் பகுதியில் ஒரு சில இடங்களில் முறையான அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்டு வந்ததை அடுத்து அவற்றுக்கு சீல் வைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், வேலூர், காட்பாடி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் கட்டடங்களுக்கு முறையான அனுமதி உள்ளதா, சீல் வைக்கப்பட்ட கட்டடங்களில் மீண்டும் பணி தொடர்கிறார்களா என்பது குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.