தினகரன் 30.01.2014
மாநகராட்சி பட்ஜெட் ஆலோசனை கூட்டம்
திருச்சி, : திருச்சி மாநகராட்சிக்கான 2014- 15ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மேயர் ஜெயா தலைமை வகித்தார். இதில் நிதிநிலை அறிக்கை தயார் செய்வது, மாநகராட்சிக்கான வருவாய் இனங்களை மேம்படுத்துதல், அரசின் மூலாதார நிதியை அதிகரிக்கவும், மாநகர வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட் டது.
ஆணையர் தண்ட பாணி, துணைமேயர் மரி யம் ஆசிக், கோட்ட தலைவர்கள் சீனிவாசன், மனோகரன், நிதிக்குழு தலைவர் அய்யப்பன், மாநகர பொறி யாளர் சந்திரன், செயற்பொறியாளர்கள் அருணாசலம், நாகேஷ், நகர்நல அலுவலர் மாரியப்பன், உதவி ஆணையர்கள் பிரபுகுமார் ஜோசப், ரங்கராஜன், தனபால் தயாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.