Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

Print PDF

தினமணி 08.11.2009

குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

திருச்சி, நவ. 7: திருச்சி மாநகராட்சியில் குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி தலைமை வகித்தார்.

தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் ஜப்பான் நாட்டு நிதி நிறுவனத்தின் நிதியுதவியுடன், மாநில அரசின் மானியத் தொகை மற்றும் மாநகராட்சியின் பங்களிப்பையும் சேர்த்து ரூ. 144.86 கோடியாக இருந்த மதிப்பீடு, தற்போது ரூ. 169 கோடியாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் ஏற்பட வேண்டிய முன்னேற்றம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இத்திட்டத்தின்கீழ், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டும் இடங்களை தேர்வு செய்வது குறித்தும், பணிகளைத் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், நகரப் பொறியாளர் எஸ். ராஜாமுகமது, நிர்வாகப் பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.