தினமணி 03.11.2009
சொத்து வரி செலுத்தாத கடைகளில் அதிகாரிகள் ஜப்தி
சென்னை, டிச. 2: சென்னையில் பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாத கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி ஜப்தி நடவடிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
வரி நிலுவைத் தொகையை உடனடியாக அவர்கள் செலுத்தியதால் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட்டனர். சென்னை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் பச்சையப்பன் அறக்கட்டளைக்குச் சொந்தமான 28 கடைகள் அமைந்துள்ளன. இந்தக் கடைகளுக்கு 2001-2002-ம் ஆண்டு முதல் சொத்து வரி செலுத்தப்படவில்லை.
கடைக்காரர்கள் சொத்து வரி செலுத்த முன்வரவில்லை. இதைத்தொடர்ந்து, புதன்கிழமை அதிகாரிகள் அதிரடியாக ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் நடவடிக்கையைத் தொடர்ந்து, வரி நிலுவைத் தொகையான ரூ. 17 லட்சத்து 82 ஆயிரத்து 368 ரொக்கத்தை அக்கடைக்காரர்கள் உடனடியாக செலுத்தினர். இதனால் அதிகாரிகள் நடவடிக்கையை கைவிட்டனர்.