Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியற்ற கட்டடங்களை அகற்ற 4 அதிவிரைவு குழுக்கள் அமைப்பு

Print PDF

தினமணி 17.12.2009

அனுமதியற்ற கட்டடங்களை அகற்ற 4 அதிவிரைவு குழுக்கள் அமைப்பு

கோவை, டிச.16: கோவையில் அனுமதியற்ற கட்டடங்களை அகற்ற 4 அதிவிரைவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: கோவை மாநகராட்சி பகுதியில் அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே பல இடங்களில் இதுபோன்ற கட்டடங்கள் அகற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் இப் பணியை தீவிரப்படுத்தும் வகையில் 4 அதிவிரைவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் தலா ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மண்டல உதவி ஆணையர் சுகுமார் தலைமையிóலான குழுவில் மண்டல சுகாதார அலுவலர் முருகன், இளம்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மேற்கு மண்டல உதவி ஆணையர் லோகநாதன் தலைமையிóலான மண்டல சுகாதார அலுவலர் மணிவண்ணன், இளம்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

தெற்கு மண்டல உதவி ஆணையர் லட்சுமணன் தலைமையிலான குழுவில் மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், இளம்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். வடக்கு மண்டல உதவி ஆணையர் பொன்முடி தலைமையிலான குழுவில் மண்டல சுகாதார அலுவலர் திருமால், இளம்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

அனுமதியற்ற கட்டடங்கள் தொடர்பான புகார்கள் வந்தால் இக்குழுவில் விரைவாக செயல்படுவார்கள். வணிக கட்டடங்களில் வாகன நிறுத்துமிடத்தில் கட்டப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், போக்குவரத்து நெருக்கடி, விபத்துகள் தவிர்க்க விதிகளின்படி தேவையான வாகன நிறுத்துமிடம் சம்பந்தப்பட்ட வணிக கட்டடங்களில் ஏற்படுத்துதல், அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் பிரதானமான விதிமீறல் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்துதல், பணியாட்களை வெளியேற்றும் பணி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

அனுமதியற்ற விளம்பரங்களை அகற்றுதல், பாதுகாப்பற்ற, வாகன நிறுத்த வசதியற்ற கட்டடங்களை உள்ளூர் திட்டக்குழுமத்தின் துணையுடன் சீல் வைக்கவும் இக்குழுவில் நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 17 December 2009 08:48