Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வாடகை செலுத்தாத கடைக்கு சீல்

Print PDF

தினமணி 18.12.2009

வாடகை செலுத்தாத கடைக்கு சீல்

சிதம்பரம்
, டிச. 17: சிதம்பரம் பஸ் நிலையத்தில் நீண்டகாலமாக வாடகை பணம் கட்டாத கடைக்கு வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டது. ÷இந்த பஸ் நிலையத்தில் உள்ள குத்தகைதாரர்கள் நீண்ட காலமாக வாடகை தொகை செலுத்தாமல் இருந்து வந்தனர். இதையடுத்து, வாடகை பணம் கட்டாத கடைகளுக்கு சீல் வைத்து வாடகை பாக்கியை வசூலிக்க நகராட்சி ஆணையர் பி. ஜான்சன் உத்தரவிட்டார்.

÷அதன்பேரில் நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் காதர்கான், கனிமொழி மற்றும் அலுவலக ஊழியர்கள் பஸ் நிலையத்தில் அதிகளவில் பாக்கி வைத்துள்ள கடையை வியாழக்கிழமை சீல் வைத்தனர். இந்த அதிரடி நடவடிக்கை மூலம் வியாழக்கிழமை மட்டும் ரூ.1. 65லட்சம் வருவாய் ஆய்வாளர்களால் வசூலிக்கப்பட்டது. ÷இதனிடையே வாடகை பாக்கி வைத்துள்ளவர்கள் கடைகளுக்கு சீல் வைக்கும் இந்த நடவடிக்கை தொடரும் என ஆணையர் பி. ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Last Updated on Friday, 18 December 2009 06:44