தினமலர் 24.12.2009
திட்ட பணிகளை விரைவாக முடியுங்கள்: கலெக்டர் உத்தரவு
காஞ்சிபுரம் : மாவட்டத்தில் திட்டப் பணிகளை காலதாமதமின்றி விரைவாக முடிக் கும்படி அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.காஞ்சிபுரம் மாவட்ட திட்டக் குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது. மாவட்ட ஊராட்சித் தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஒன்றிய குழுத் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அனைத்து துறைகள் சார்பில் நடைபெறும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.கலெக்டர் பேசுகையில், தற்போது நடைபெறும் பணிகள், நடைபெற உள்ள பணிகள் அனைத் தையும் காலதாமதமின்றி உடனடியாக முடிக்க வேண்டும். பணிகள் குறித்த விபரங்களை சம் பந்தப்பட்ட உள்ளாட்சி தலைவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஏரி தூர் வாருதல், ஏரி மதகு சரி செய்தல், சாலைப் பணிகள், கால்வாய் சீரமைப்புப் பணிகள், வடிகால் அமைத் தல், ஊனமுற்றோர் உதவித் தொகை வழங்குதல், நகைக்கடன், பயிர் கடன் போன்றப் பணிகளை விரைவாக முடிக்க வேண் டும், என்றார்.