Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவுப் பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டை

Print PDF

தினமணி 05.01.2010

துப்புரவுப் பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டை

கிருஷ்ணகிரி,ஜன. 4: கிருஷ்ணகிரி நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

தாட்கோ மூலம் தூய்மை பணிபுரிவோர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான ஒரு வார கால சிறப்பு முகாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் நடந்த இம்முகாமில், 40 துப்புரவுப் பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளை நகர்மன்றத் தலைவர் பி.பரிதா நவாப் வழங்கினார். மீதம் உள்ள 94 பணியாளர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

நகராட்சி ஆணையர் சி.வி.பௌலோஸ், தாட்கோ மேலாளர் மீனாட்சிசுந்தரம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம், நகர்மன்ற உறுப்பினர்கள் கடலரசு மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Tuesday, 05 January 2010 10:26