தினகரன் 08.01.2010
பெரம்பூர் மேம்பால பணி தலைமைச் செயலாளர் ஆய்வு
சென்னை : சென்னை மாநகராட்சி சார்பில் பெரம்பூர் மேம்பாலம் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. மேம்பாலம் கட்டும் பணியின் ஒரு பகுதியாக, ரயில்வே பகுதியில் மேல்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதுதவிர, வாகன போக்குவரத்து சீராக அமைய டாங்பன்ட் சாலையும், பெரம்பூர் நெடுஞ்சாலையும் இணைத்து ஒரு புதிய இணைப்புச் சாலையும், பாலத்தின் தெற்கு பகுதியான ஜமாலியா பகுதியில் ஒரு புதிய சாலை அமைக்கும் பணி, அணுகுச் சாலைகளை சீரமைக்கும் பணி ஆகியவையும் நடந்து வருகிறது. மேலும், மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் ரூ.69 லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்காவை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி ரூ.52 லட்சத்திலும், மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி ரூ.42 லட்சத்திலும் நடக்கிறது.
ரூ.87 லட்சம் செலவில் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ரூ.53 கோடியே 70 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, மாநகராட்சி ஆணையர் ராஜேஷ்லக்கானி, தற்போது நடக்கும் பணிகள் குறித்து தலைமைச் செயலாளரிடம் விளக்கினார்